சென்னை,

ருமானத்துக்கு அதிகமாக  சொத்துக் குவிப்பு வழக்கில்  சென்னை சிபிஐ நீதிமன்றம்  டிடிவி தினகரன் உறவினர்ம முன்னாள் ரிசர்வ் வங்கி அதிகாரியான பாஸ்கரன் மற்றும் அவரது மனைவிக்கும் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

 

டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவி. இவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன்.  இவர் ஓய்வு பெற்ற ரிசர்வ் வங்கி அதிகாரி.  இவர்மீது  வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிபிஐ, 1997ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து, வழக்கை விசாரித்த சிபிஐ கோர்ட்டு பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20 லட்சம் அபராதமும் , பாஸ்கரனின் மனைவி ஸ்ரீதளதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2008 ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பாஸ்கரன் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் பாஸ்கரன் மற்றும் அவரது மனைவியை சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.

ஆனால், அவர்கள் இருவரும் சிபிஐ நீதிமன்றத்தில் சரணடையாததால், இருவருக்கும் பிடிவாரண்டு பிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத் உத்தரவிட்டார்.