கோவை

பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச தடகள போட்டியில் கோவை மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் சர்வதேச அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மும்முறை தாண்டும் போட்டியில் கோவையைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி பிளஸ்-2 மாணவி திவ்யா ஸ்ரீ பங்கேற்று 12.22 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவியைப் பயிற்சியாளர் நந்தகுமார், ராஜேஷ் கண்ணன் மற்றும் கோவை தடகள சங்க நிர்வாகிகள், சக மாணவிகள் பாராட்டி உள்ளனர்.