சென்னை: ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்து வந்ததாக கைது செய்யப்பட்டுள்ள  பிரபல யுடியூபர் பப்ஜி மதனிடம் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று 2வது நாளாக துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘பப்ஜி’ விளையாடி ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு வந்த மதன்மீது ஏராளமானோர் புகார் அளித்தனர். இதையடுத்து, அவர்மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை விசாரணைக்கு அழைத்த நலையில், அவர்  விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பப்ஜி மதன் நடத்தி வந்த யூடியூப் சேனலின் அட்மினாக செயல்பட்டு வந்த அவரது மனைவி கிருத்தகா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடர்ந்து, மதனை தர்மபுரியில் வைத்து கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பண மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதைதொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் பப்ஜி மதன் ஆஜர்படுத்தப்பட்டார். பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இன்று 2-வது நாளாக மதனிடம்  விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன்மூலம் பல தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறத.

இன்றைய விசாணைக்கு பின்னர் மதன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.