சென்னை

சிபிசிஐடி காவல்துறையினர் தமிழக பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

 

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி சிக்கியது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சம்மன் அனுப்பியும்  எஸ்.ஆர்.சேகர் ஆஜராகாததால் சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவையில் அவரது வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது ரெயிலில் சிக்கிய பணம் எங்கே இருந்து வந்தது? கட்சிக்கும், அந்த பணத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டதற்கு எஸ்.ஆர்.சேகர் மிகவும் பொறுமையாக பதில் அளித்துள்ளார்.

ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்து. அவருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர்.