பெங்களூரு:
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கர்நாடக முதல்வர் அறிவித்தார்.
காவிரியில் நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த  தீர்ப்பு குறித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா,  சட்ட வல்லுனர்கள், மூத்த அமைச்சர்களுடன்  ஆலோசனை நடத்தினார்.
kaveru
ஆலோசனையில், உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி, மேல் முறையீடு செய்யவும், போராட்டம் குறித்தும்  விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடுத்து மேல் முறையீடு செய்ய  கர்நாடக பாஜ தலைவர் எடியூரப்பாவும் வலியுறுத்தி  உள்ளது குறிப்பிடத்தக்கது.