சென்னை:
சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 4,480 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டி தற்போது குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 34,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடந்தவாரம் திங்கள்கிழமையிலிருந்து அமலில் இருந்துவருகிறது. இந்தநிலையில், தற்போது மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 4,480 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறி சுற்றித்திரிந்த 2,620 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.