மன்னார்குடி:
திமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் மன்னார்குடியில் உள்ள வீட்டில் சோதனை நடக்கிறது. காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

சென்னையில் முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

காமராஜரின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களின் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.