சென்னை: திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்த‌தாக, திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, அவதூறாக செய்தி பரப்பியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு அணியின் இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் ஆகியோரின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.