திருச்சி: கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் விடுத்ததாக, பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரத்தின்போது, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குறித்து கடுமையாக தாக்கி பேசினார்.  அப்போது, எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது  என்று ஆவேசமாக கூறியவர், தூக்கிப் போட்டு மிதிச்சன்னா பல்லு எல்லாம் வெளியே வந்துரும், வன்முறையை விரும்பாதமல்,  அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்  என கடுமையாக  பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி, திமுகவினர் மீது நீ கை வைத்து பார் என எதிர்சவால் விடுத்தார்.

இந்த நிலையில், கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.