சென்னை

ரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடி குறித்து இ பி எஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை நவம்பர் 7 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அவர்,

“அதிமுக பொதுச்செயலாளர் எனத் தன்னை உயர்நீதிமன்றத்துதேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. எனவே அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்”

என்று தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டார்.  இன்று வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என இபிஎஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு ஓபிஎஸ் தரப்பில், அதிமுக பொதுக்குழுவில் தன்னை நீக்கிய தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அந்த வழக்கை பொறுத்து இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை நவம்பர் 7ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.