சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது,.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த அதிமுக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி வழங்கியதுடன்,  7.5% உள் ஒதுக்கீடு வழங்கியும் உத்தரவிட்டது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 400 பேர் வரை மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதைத்தொடர்ந்து திமுக அரசு பொறியியல் படிப்பிலும் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது.

தமிழகஅரசின்  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% வழங்கும் சட்டத்தை எதிர்த்து, அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில், தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி தலைமையிலான அமர்வில் பலகட்ட விசாரணை நடைபெற்று முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில்,  தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.