ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்வதாக கடந்த நேற்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று இரவு தமிழகம் வந்தடைந்தனர்.
ராமேஸ்வரம், நாகை, காரைக்கால் பகுதியில் இருந்து, மார்ச் 24ல் ஐந்து விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற, 54 மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மீனவர்களை விடுவிக்க கோரி, தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, மத்தியஅரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதையடுத்து, மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன்படி,  ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த,  மீனவர்கள் மற்றும் நான்கு படகுகளை இலங்கை விடுவித்தது. விடுவிக்கப்பட்ட மீனவர்களில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 பேர் நேற்று இரவு சொந்த ஊர் வந்தடைந்தனர்.