டெல்லி: மேற்குவங்க மாநிலம், அஸ்ஸாமில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, அஸ்ஸாமில் 8.84% மேற்கு வங்கத்தில் 7.72% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 5 மாவட்டங்களில் உள்ள  30 தொகுதிகளில் 191 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் மேற்கு வங்க மாநிலத்தில்  கொரோனா பரவல் காரணமாக 37% வாக்குப்பதிவு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு மொத்தம் 10 ஆயிரத்து 288 வாக்குப்பதிவு மையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையங்களிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அசாமில் 47 தொகுதிகளில் 204 வேட்பாளர்களும்  போட்டியிடுகின்றனர்.  அங்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. அங்கு மொத்தம் 11,537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு81 லட்சத்து 9 ஆயிரத்து 815 பேர் வாக்களிக்கவுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க வாக்காளர்கள் மாஸ்க் அணிந்தும், கையுறை அணிந்தபடியும் வாக்களித்து வருகின்றனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி  அஸ்ஸாமில் 8.84% மேற்கு வங்கத்தில் 7.72% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.