சென்னை: நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம்,  போக்குவரத்து பர்மிட் புதுப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்தியபோக்குவரத்து அமைச்சகம்  அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால்,  ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், பர்மிட் போன்ற மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம்  பல்வேறு கட்டமாக நீட்டித்து வருகிறது.  இந்த நிலையில், தற்போது தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், போக்குவரத்து ஆவணங்களுக்கான அவகாசத்தை மேலும் நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஆவணங்கள் அனைத்தும் புதுப்பிக்க ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.