டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு மற்றும் கொரோனா நெறிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தடுப்பூசி போடப்படுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரபல முன்னாள் கிரிக்கெட் விரன  சச்சின் டெண்டுல்கருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா அறிகுறி தென்பட்டதால், தானாக முன்வந்து பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தான் தனிமைப்படுதிக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  குடும்பத்தினர்  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வேறு யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி.

அனைவரும் கவனமாக  இருங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.