ஷார்ஜா:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார். பெர்குஷன், ஷிவம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர் அணி, கொல்கத்தா அணி வெற்றி 3   விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.

ஐபிஎல் தொடரின் வரும் 15ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.