புதுவை:
புதுச்சேரி மாநிலத்தில் கலால் வரி உயர்த்துவது தொடர்பாக மாநில அமைச்சரவை கூட்டத்தில்  முடிவு செய்யப்படும் என முதல்வர்  நாராயணசாமி கூறினார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி கூறியதாவது:–
புதுவையில் வருவாய்வரி , கலால் வரிகளை உயர்த்து குறித்து அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்படும்.
பெட்ரோல் , கோவிட் வரிகளை சில மாநிலங்கள் விதித்துள்ளன. அதேபோல் புதுவையிலும் வரிவிதிக்க இன்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
வருவாய்வரி , கலால் வரிகளை உயர்த்துவது குறித்து புதுவை அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்படும் .
புதுவையில் ஒரு சில கடைகளை காலை 10 மணிக்கு மேல்திறப்பது குறித்தும்  இன்று முடிவு செய்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.