திருவண்ணாமலை
ஒரு தொழிலதிபர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசிக்க 3 கிலோ தங்க நகைகள் அனிந்து வந்துள்ளார்.

தினமும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இதை போல நேற்று விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார்.
சாம்பசிவ ராவு துபாயில் ஓட்டல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அவர் கழுத்து மற்றும் கை நிறைய சுமார் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் அணிந்தபடி வந்தார்.
எனவே கோவிலில் இருந்த பக்தர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்