சென்னை: சென்னை சென்ட்ரலில் நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் தாக்கம் காரணமாக 2 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. கடும் மழை எதிரொலியாக மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.

குறிப்பாக ஈசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்தை தவிர்க்குமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அண்ணா சாலை, சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து முடக்கப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு மக்கள் சென்றுவிடாதபடி தடுக்கப்பட்டது. இந் நிலையில், சென்னை சென்ட்ரலில் நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுவதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். மாநகரப் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.