சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. அதன் எதிரொலியாக இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ம் தேதி வரை மதுரையில் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அதே நிபந்தனைகள் மதுரைக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில், மதுரையில் அரசு பேருந்துகள் ஓடாது என்றும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் மதுரை ஆட்சியர் அறிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க மதுரைக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய நகரில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.