சென்னை:
சென்னையில் பேருந்து சேவை சீரானது; பொதுமக்கள் சிரமமடைந்துள்ளதால் சில வழித்தடங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சென்னையில் இன்று (மே 29) மாலையில் தி.நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் திடீரென அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் டிப்போவிற்கு சென்றுள்ளன. தனியார் மூலம் டிரைவர், கண்டெக்டர்களை பணி அமர்த்த எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் மந்தைவெளி, ஆவடி, தி.நகர், பூந்தமல்லி, தாம்பரம் டிப்போக்களுக்கு பேருந்துகளை கொண்டு சென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

சென்னையில் பேருந்து சேவை சீரானது; பொதுமக்கள் சிரமமடைந்துள்ளதால் சில வழித்தடங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.