சென்னை:
பிளஸ் 2 பொதுத்‌ தேர்வு விடைத்தாள் நகலினை இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்வது, மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு செய்வது குறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’கடந்த மார்ச்‌/ ஏப்ரல்‌ மாதத்தில் மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த மாணவர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை நாளை 30.05.2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல்‌ முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச்‌ சென்று Notification-ஐ க்ளிக் செய்தவுடன்‌ HSE Second Year Exam, March/ April 2023 – Scripts Download என்ற வாசகத்தினை “Click” செய்தால்‌ தோன்றும்‌ பக்கத்தில் தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்து தாங்கள்‌ விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின்‌ நகலினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

விடைத்தாள்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ -॥ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால்‌, இதே இணையதள முகவரியில்‌ “Application for Retotalling/ Revaluation” க்ளிக் செய்து, வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்‌.

தேர்வர்கள்‌ இவ்விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள்‌ எடுத்து 34.05.2023 ( புதன்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ 03.06.2023 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும்‌ மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ மறுகூட்டல்‌ -॥ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகத்தில்‌ விண்ணப்பப்‌ படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்‌ தொகையை பணமாக செலுத்த வேண்டும்‌.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.