புதுச்சேரி

சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தால் புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மேலும் தமிழக அரசு பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலு டெம்போ, ஆட்டோ போன்ற போக்குவரத்தும் இயங்கவில்லை. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்றைய முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாகப் புதுச்சேரிக்குக் கடலூர், விழுப்புரத்தில் இருந்து செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி வழியாகச் சென்னை செல்லும் பேருந்துகள் விழுப்புரம் மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன.

முழு அடைப்பு காரணமாக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. என்பதால் பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரமாகக் காத்திருக்கின்றனர்.