புதுச்சேரி:

மிழகத்தில் அரசு பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று நள்ளிரவு முதல் புதுச்சேரியிலும் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

ஆனால் இந்த பஸ் கட்டண உயர்வு புதுச்சேரிக்குள் ஓடும் பஸ்களுக்கு கிடையாது என்றும், வெளி ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் மட்டுமே கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு இன்று( ஜன., 22) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் கட்டணம், ரூ.100ல் இருந்து ரூ.145 ஆக உயர்வு

புதுச்சேரியில் இருந்து பைபாஸ் சாலை வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.140 ஆக உயர்வு

புதுச்சேரியில் இருந்து தமிழகம் வழியாக திருப்பதி செல்லும் அரசு பஸ் கட்டணம் ரூ.170ல் இருந்து ரூ.290 ஆக உயர்வு

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்லும் ஏ.சி., பஸ் கட்டணம் ரூ. 200ல் இருந்து ரூ.315 ஆக உயர்வு

இவ்வாறு புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.