சென்னை: தோட்டாக்கள் நிரப்பி காரில் வைத்திருந்த பங்க் உரிமையாளரின் கைத்துப்பாக்கி மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கியை திருடியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மதுரவாயலில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர், ஆலப்பாக்கம், சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா, இவர் தீபாவளியையொட்டி, நண்பர்கள், பெட்ரோல் பங்கில் வேலை செய்யும்  ஊழியர்களுக்கு கொடுக்க தேவயைன சுவிட் பாக்கெட்டுக்களை காரில் எடுத்து வந்துள்ளார்.

சிலருக்கு சுவிட் கொடுத்த நிலையில், மதுரைவாயலில் உள்ள பங்க் ஊழியர்களுக்கும் தனது காரில் வைத்திருந்த சுவிட் கொடுத்துள்ளார். அப்போது, காரில் இருந்த  துப்பாக்கி திடீரென காணவில்லை  என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பங்க் ஊழியர்கள் மற்றும் சுவிட் கொடுத்தவர்களிடம் விசாரித்தும், துப்பாக்கி குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இவர் கொடுத்துள்ள புகாரில்,  தீபாவளி தினத்தில் இனிப்புகள் கொடுக்க சென்றபோது காரில், தோட்டாக்கள் நிரப்பி வைத்திருந்த கைத்துப்பாக்கி காணவில்லை என தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து புகார் பதிவு செய்த காவல்துறையினர், காரில் இருந்து  துப்பாக்கியை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது