ஸ்ரீஹரிகோட்டா

பி எஸ் எல் வி – சி 65 ராக்கெட் 7 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது.   இன்று காலை 6.30 மணிக்கு இங்குள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-65 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பி எஸ் எல் வி 6சி 65 ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சாட்’ என்ற பிரதான செயற்கைக் கோள் உள்பட மொத்தம் 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.  ‘டிஎஸ்-சாட்’ செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.

இந்த செயற்கைக் கோள் ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியைக் கொண்டுள்ளதாகும். இது அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும்.   இஸ்ரோ விஞ்ஞானிகள் இது பூமியிலிருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது என்று கூறினர்.