டில்லி

திர்க்கட்சிகளின் கூட்டம் வரும் செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

 

எதிர்க்கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் வலுவான அணியை அமைத்து உள்ளன. அணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தது.

மும்பையில் 3-வது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் மாதம் / 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெறும் என தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளைக் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் செய்து வருகிறது.

ஆகஸ்டு 25 மற்றும் 26-ந் தேதிகளில் கூட்டணியின் பல்வேறு தலைவர்களுக்குப் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே சரத்பவார் போன்ற முக்கிய தலைவர்கள் திட்டமிட்ட அலுவல்களில் பங்கேற்பதால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்து உள்ளனர்.

ஆகவே இந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே இந்தக் கூட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படலாம் எனவும் அவர்கள் கூறி உள்ளனர்.