சென்னை:
மூளை சாவு அடைபவர்களிடம் இருந்து உடல் உறுப்பு தானம் பெறப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் ரோட்டரி ராஜன் கண் வங்கி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் தி.நகர் இணைந்து நடத்திய கண்தான விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் உடல் உறுப்பு தானம் பெற அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.