சென்னை:
மிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான உத்தரவில், புத்தக கண்காட்சிக்கு மாநில அளவில் பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில், நூலகத்துறை, பாடநூல் கழகம், பதிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த, மாவட்டங்களை மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில் மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.17.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலூர், கரூர் மாவட்டங்களுக்கு தலா ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீதம் உள்ள 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.12 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.