சென்னை : சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு மர்ம நபர் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தலைமைச்செயலகம் விரைந்த காவல்துறையினர்,  வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் தலைமைச் செயலகத்தில் அங்குலம் அங்குலமாக  சோதனை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பணிக்கு வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள், தலைமைச்செயலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.  இதனால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர். அங்கு முழு வீச்சில் சோதனை நடைபெற்று வருகிறது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.