கொல்கத்தா

கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள ஏர் ஏசியா விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தீவிர சோதனை நடந்து வருகிறது.

கொல்கத்தாவில் விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது. அதில் 179 பயணிகள் ஏறி இருந்தனர். கிளம்ப இருந்த நேரத்தில் அந்த விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த மிரட்டல் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்துள்ளது. பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக இது குறித்து கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். உடனடியாக இது குறித்த தகவல்கள் விமான ஓட்டிகளுக்கும் பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

விமான பணியாளர்கள் விமானத்தில் இருந்த 179 பயணிகளையும் விமானத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். தற்போது சி ஐ எஸ் எஃப் வீரர்கள் விமானத்தை தீவிரமாக சோத்னை இட்டு வருகின்றனர். விமான நிலையம் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.