சமீப காலமாக பல்வேறு பிரபலங்கள் தங்களின் சமூக ஊடக கணக்கை முடக்கிவிட்டு வெளியேறி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கர், சமூக ஊடகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

“மீண்டும் உறக்கத்துக்குச் செல்கிறேன். உலகம் நல்லபடியாக மாறிய பிறகு என்னை எழுப்புங்கள். சுதந்திரம், அன்பு, மரியாதை, அக்கறை, மகிழ்ச்சி, ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, நல்ல மக்கள் இருக்கும் உலகம். வெறுப்பு, வாரிசு அரசியல், பொறாமை, முன் தீர்மானங்கள், ஆதிக்க மனப்பான்மை உடையவர்கள், ஹிட்லர்கள், கொலைகாரர்கள், தற்கொலைகள், தீயவர்கள் இருக்கும் உலகமல்ல. கவலை வேண்டாம். நான் சாகவில்லை. சில நாட்கள் விலகியிருக்கப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.