டைட்டிலை படித்தவுடன் என்னது பங்களா வை பிளாஸ்டிக் ஷீட்ல மூடிட்டாரா என்று ஆச்சரியப்பட வேண்டாம். அது உண்மைதான். பாலிவுட் பாட்ஷா என்றழைக் கப்படுபவர் ஷாருக்கான். இவர்தான் நம்ப முடியாத அந்த வேலையை செய்திருக்கிறார்.

மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ளது ஷாருக்கான் குடும்பத்தினருடன் வசிக்கும் பங்களா. இதைத்தான் பிளாஸ்டிக் கவரால் மூடியிருக்கிறார். பங்களாவை பிளாஸ்டிக் கவரால் மூடியிருக்கும் படங்கள் நெட்டில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து பங்களாவை இப்படி மூடியிருக்கிறார் என்று நெட்டிஸன்கள் அவரை கலாய்த்துக்கொண்டி ருக்கின்றார், ஆனால் மும்பையில் தற்போது மழை கொட்டுகிறது அதனால்தான் அவர் இந்த காரியத்தை செய்திருப்பதாக கூறப்படு கிறது.