சென்னை:
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி உள்ளதாகவும் 10க்கும் மேற்பட்டேர்ர்  காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்தியஅரசுக்கு சொந்த மான என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் உள்பட ஆந்திரா, கேரளா  பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த அனல் மின் நிலையதின்  2-வது அனல்மின் நிலையத்தில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பகுதியில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த வெடி விபத்தில் இதுவரை 5 பேர் பலியாக உள்ளதாகவும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. படுகாயம் அடைந்த ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊழியர்கள் பலர் விபத்தில் சிக்கி இருப்பதால் உயிரிழப்புகள் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிறது.

ஏற்கனவே கடந்த  ஏப்ரல் 8ம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.