உத்தரப்பிரதேச தேர்தலால் பாஜகவுக்கு தேர்தல் ஜுரம்

** உத்திர பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் வருவதை ஒட்டி பா. ஜ. க. வுக்குத் ‘ தேர்தல் ஜுரம் ‘ தகிக்கிறது!

கடந்த 5 வருடங்களாக யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பா.. ஜ. க. அரசு ,அந்த மாநிலத்தையே பல வகைகளிலும் நாசமாக்கி விட்டது!

அனைவரும் ஒரே முகமாக இருந்த மாநிலத்தை மதவெறியால் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி விட்டது யோகி அரசு!

அதுமட்டுமின்றி, பட்டியல் இனத்துப் பெண்கள் பலரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் ஆபத்தான கலாச்சாரம் யோகி ஆட்சியில் தொடர்ந்து நடக்கிறது!

மேலும், ‘பசுவதைத் தடுப்பு’ என்கிற போர்வையில், பசுக்களை சாலையில் ஓட்டிச் செல்லும் அப்பாவி விவசாயிகள், பஜ்ரங் தள் பசு குண்டர்களால் தாக்கப்படுகிறார்கள்!

இப்படி யோகி ஆட்சியில் கலவர பூமியாக மாறிக் கிடக்கும் உ. பி, யில், தற்போது ‘ நல்லாட்சி’ நடப்பதாக, ஆரம்பக் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன் 56 இஞ்ச் மார்பைத் தட்டிப் பெருமிதம் கொள்கிறார்…!

*** அ.. தி. மு. க. வின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில், தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வரும் சோதனைகளில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள்,பணம் போன்றவை குவிக்கப்பட்டுள்ள விவரங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன!

தாங்கள் கொள்ளை அடித்துக் குவித்துள்ள சொத்துகள் பிடிபடுகிறதே என்கிற ஆத்திரத்தில், சோதனையிட வரும் அதிகாரிகளையும் காவல் துறையினரையும் அந்த முன்னாள் அமைச்சர்கள் மிகவும் தரக் குறைவாக விமர்சித்து வருகிறாார்கள்….

இந்த ‘அநாகரிகப்’ போக்குகளை மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்!

*** ஓவியர் இரா. பாரி.