திருவனந்தபுரம்: மத்திய பாஜக அரசால் சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற ராகுல் காந்தி மக்களிடையே வெறுப்பு வன்முறையை தூண்டி தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுகிறது என பாரத் ஜோடா யாத்தை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டினார். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் காங்கிரஸ் கட்சியை 100 மடங்கு புத்துணர்ச்சி அடைய செய்துள்ளது என மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பாரத் ஜோடோ பாதயாத்திரை என்ற பெயரில், இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ளார். கடந்த 7ந்தேதி குமரியில் தொடங்கிய பாதயாத்திரை தற்போது கேளாவில் நடைபெற்று வருகிறது. இந்த பாத யாத்திரை மொத்தம் 150 நாள்களாக 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது. இந்த பாத யாத்திரை கடந்த 10ந் தேதி கேரளாவில் நுழைந்தது.

இதையடுத்து நேற்று மாலை திருவனந்தபுரம் அருகே உள்ள  கன்னியாபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ராகுல்காந்தி,  மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களிடையே வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெறுவதாகவும், ஆனால் நாடு எதிர்கொள்ளும் சமூக பொருளாதார பிரச்சினை மற்றும் வேலை வாய்ப்பு பிரச்சினைகளை அது தீர்க்க முடியாது என்றவர்,  மக்களின் குரல் அமைதியாகி விட்டதாகவும், ஆளும் கட்சியால் ஊடக நிறுவன உரிமை யாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

 

இதுதொடர்பாக ராகுல் பதிவிட்டுள்ள டிவிட் பதிவில், இந்தியாவின் கனவு உடைந்து விட்டாலும் சிதறவில்லை, அந்த கனவை நனவாக்க, நாங்கள் இந்தியாவை ஒன்றிணைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கேரளாவில் 3வது நாள் பயணத்தை இன்று காலை கன்னியாபுரத்தில் இருந்து அவர் தொடங்கினார். அவருடன் ஏராளமான சிறுவர்கள் இளைஞர்கள் பலர் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அகில இந்திய காங்கிர1 கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் ,  ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் காங்கிரஸ் கட்சியை 100 மடங்கு புத்துணர்ச்சி அடைய செய்துள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் மொத்தம் 19 நாட்கள் ஏழு மாவட்டங்களை கடக்கும் ராகுல்காந்தி, அக்டோபர் ஒன்றாம் தேதி கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைகிறார்.