டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில், நேற்றைய பாதிப்பு 4,369  ஆக உள்ளது. டந்த 6-ந் தேதி பாதிப்பு 4,417 ஆக இருந்தது. அதன்பிறகு 6 நாட்கள் கழித்து இன்று மீண்டும் 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான  கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும்  4,369 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,178 பேர் நலம் பெற்றுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 417 ஆக உயர்ந்தது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரத்து 364 ஆக உயர்ந்தது.

தற்போது 46,347 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 829 குறைவு ஆகும்.

கொரோனா பாதிப்பால் மேலும் 13 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,185 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 5,178 பேர் கொரோனா தொற்றில் இருந்து நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 417 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 21,67,44 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதவரை 2,15,47,80,693 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.