கடலூர்:  தமிழ்புத்தாண்டு தொடக்க நாளான ஏப்ரல் 14ந்தேதி  திருச்செந்தூரில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்குகிறார்.

கடலூரில் இன்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநிலம்  முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தனது நடைபயணம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் தொடங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும்,  பூத் கமிட்டியை பலப்படுத்துவது, கட்சிக்கு நிதி சேர்ப்பது, வேங்கை வயல் சம்பவத்திற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும், ராமர் பாலத்தை பாதிக்காமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில்  பேசிய அண்ணாமலை, ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் தமிழ்நாடு முழுவதற்குமான தனது நடைபயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார்.

இதனிடையே, பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  அதன்படி,

  1.  ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பேற்ற பாரத பிரதமருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ள‘து.
  2. சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக அராஜகம் நடந்ததாக  அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. ராமர் பாலம் பாதிக்கப்படாமல்  சேது கால்வாய் திட்டத்தை  அமல்படுத்த வேண்டும்
  4. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்
  5. காசி தமிழ்சங்கம் தந்து தேசத்தை பாதுகாத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு
  6. தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே  பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும்  திமுக தலைமையிலான அரசை கண்டித்து தீர்மானம்
  7. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கவும்,  பூத் கமிட்டியை வலுப்படுத்தவும், 
  8. தமிழக விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது தமிழகம் தொழில் வளர்ச்சி 8ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
  9. இறுதியாக, பாஜகவின் தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்ட நட்டாவிற்கு வாழ்த்து தெரிவித்தும்  கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து, நடப்பாண்டிற்கான 14 நிகழ்ச்சி நிரல்களும் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன. பிற்பகலுக்குப் பிறகும் பாஜகவின் செய்ற்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.