ஜெய்ப்பூர்’

ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலுக்காக பாஜக  63 பேர் கொண்ட 2 ஆம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது,

அடுத்த மாதம் (நவம்பர்) 25 ஆம் தேதி 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது.  இங்கு ஆட்சியைப் பிடிக்க தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று இந்த தேர்தலுக்கான, 33 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் வேட்பாளர் பட்டியலை மாநில பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. இதில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, தனது பாரம்பரிய தொகுதியான ஜல்ரபதானில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த 83 வேட்பாளர்கள் பட்டியலில் 50 நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட போதிலும்  9 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த 2-வது பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இடம்பெறவில்லை.

முந்தைய பட்டியலில் ராஜஸ்தான் பா.ஜ.க. மூத்த தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தின் மருமகனும், 5 முறை சட்டமன்ற உறுப்பினருமான நர்பாத் சிங் ராஜ்வி, இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு  கிளம்பியநிலையில், ராஜ்விக்கு இந்த பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 83 பேர் பட்டியலில், 10 பெண் வேட்பாளர்களும் அடங்குவார்கள். இதுவரை பாஜக இப்பட்டியலுடன், 124 வேட்பாளர் விவரங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.