விருதுநகர்

லைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் அளித்த பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது.  இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவர் தலைமறைவானார்.

அவரை காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர்.  இந்நிலையில் இன்று அவர் கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.  அவருடன் காரில் பயணித்த 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஜக உதவி செய்ததாக தெரிவித்துள்ளது.

ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்த போது அவருக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் அடைக்கலம் அளித்துள்ளார்.  தற்போது பாலகிருஷ்ணனும் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.