சாம்ப்ல்ட்

த்தரகாண்ட் மாவட்டத்தில் சிறுமி பாலியல் வனகொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக நிர்வாகி தலைமறைவாகி உள்ளார்.

 உத்தரகாண்ட் மாநிலத்தின் சாம்ப்வட் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் ராவத் பாஜகவின் நிர்வாகி ஆவார்.  சமீபத்தில் இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையொட்டி பாலியல் வன்கொடுமை தொடர்பாகக் கமல் ராவத் மீது சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் கமல் ராவத் தலைமறைவானார். எனவே தலைமறைவான பாஜக நிர்வாகி கமல் ராவத்தை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.