மராவதி

நேற்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமபதி ராயுடு இணைந்துள்ளார்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஆந்திராவைச் சேர்ந்தவர் ஆவார். அம்பதி ராயுடு இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார்.  பிறகு சிஎஸ்கே அணியில் இணைந்தார்.

சிஎஸ்கே அணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்று விளையாடிய ராயுடுநடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.  இவரது இந்த முடிவு பல கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது

நேற்று இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அப்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவரை கட்சியில் வரவேற்று கட்சி சால்வை அணிவித்தார்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குண்டூர் மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயுடு இணைப்பு பற்றிய செய்தியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.