புதுடெல்லி:
பாஜக அரசு இளைஞர்களை ஏமாற்றி வருவதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மத்திய பாஜக அரசு, வெற்று பேச்சு பேசி இளைஞர்களை ஏமாற்றுகிறதே ஒழிய வேலை தர மறுக்கிறது என்றும் கடந்த 2022 -ல் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் மட்டும் 12 ஆயிரம் பேர், வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், 30 லட்சம் அரசு வேலை காலியாக இருக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.