டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18,815 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 38 பேர் உயிரிந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4 கோடியை தாண்டியது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல்,  தினசரி பாதிப்பு விகிதம் 4.96 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணியுடன் முடிந்த கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த  24 மணி நேரத்தில், புதிதாக மேலு, 18,815 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,78,054 ஆக உயர்ந்தது.

நேற்று மேலும் 38பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டின் உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 5,25,343ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் தொற்றில் இருந்து 15,899 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,37,876 ஆக உயர்ந்துள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 98.51% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,22,335 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.28% ஆக உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,62,441 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,98,51,77,962 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 86,57,23,169 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 3,79,470 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.