பாட்னா:

விவசாய பயிர்களை சூறையாடி வரும் நில்கை என்ற காட்டு மாடுகளை, அரசு அனுமதியுடன், உயிரோடு புதைக்குழிக்குள் போட்டு புதைக்கும் பதபதைக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

ஒரு உயிரை உயிரோடு புதைக்கும் அளவுக்கு மக்களின் மனநிலை மாறி வருகிறதோ…… என்று எண்ணத்தோன்றுகிறது.

பீகார் மாநிலத்தில் காணப்படும் நில்கை எனப்படும் ஒருவகை காட்டுமாடுகள் விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதை மாட்டை சாதாரணமாக விரட்ட முடியாத விவசாயிகள் இந்த பிரச்சினை குறித்து அரசின் கவனத்துக்குச் எடுத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து ஆய்வு செய்த மாநில அரசும், நில்கை மாடுகளை கொல்வதற்கு ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து  பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் மட்டும் 300 நில்கை மாடுகள் கொல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக சிலரை மாநில வனத்துறை தற்காலிகமாக பணிக்கு நியமித்து உள்ளது. இவர்கள் மாடுகளை வேட்டையாடி வருகின்றன. இந்த நிலையில், இவர்களிடம் சிக்கிய மாடு ஒன்று காயம்பட்ட நிலையில், அதை உயிரோடு புதைக்குழிக்குள் போட்டு, ஜேசிபி இயந்திரம் மூலம் உயிரோடு மணலால்புதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இந்த கொடூரமான செயல் பார்ப்போரின் மனதை பதபதைக்க வைக்கிறது…

டிஜிட்டல் உலகின் வளர்ச்சி… மக்களின் மனநிலையை மங்கச்செய்து வருவதற்கு இதுவும் ஒரு உதாரணம்….

இந்த கொடூர செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

மன வலிமை அற்றவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்…