பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும் பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில்.

இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் படம் வெளியாகுமா ஆகாதா? என்ற கவலையில் ரசிகர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் சற்று முன் இப்படத்திற்கு வந்த அனைத்து தடைகளும் நீங்கி குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.

மேலும் பிகில் தனது கதை என கூறிய அம்ஜத் மீரானின் வழக்கை நவம்பர் 5 க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்