ஜல்லிகட்டு போராட்டத்தை தொடர்ந்து, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி.

இதை தொடர்ந்து, பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் தற்போது மணலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இதயத்துக்கு நடுவே தான் இருப்பது போன்ற புதிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அதில் சஸ்பென்ஸ் மற்றும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூலியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.