விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரியல்லா, ஆஜித், சுசித்ரா, ரேகா, அர்ச்சனா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர்.

இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா, ஆஜீத் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் ஷிவானி வெளியேற்றப்பட்டார். 5 லட்சம் பணத்தோடு சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினார் கேப்ரியல்லா.

இந்நிலையில் தற்போது ஆரி, பாலா, சோம், ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய 5 பேரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களாக வீட்டில் உள்ளனர்.

இதற்கிடையே பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யா பாண்டியன் ’எவிக்ட்’ செய்யப்பட்டதாக கூறப்படுகிறது . ரம்யா பாண்டியனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டிலிருந்து சோம் சேகர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நேற்றைய எபிசோடில், பிக் பாஸ் தொகுப்பாளரான கமல்ஹாசன் இறுதிப் போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தினார். ரியோவுக்கு ட்ரெக்கிங் கிட், பாலாவுக்கு டம்பெல்ஸ், ரம்யாவுக்கு ஆர்கானிக் விதைகள், சோமுக்கு இசைக்கருவி, ஆரிக்கு பேனா மற்றும் டைரியை அவர் வழங்கினார்,