பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40 ஆயிரம் பாடல்களுக்கு பாடி உள்ளார். அவர் சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் சூளைமேட்டில் உள்ள மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அப்போது ஒரு வீடியோ வெளியிட்டார். அதில். ’கொரோனா பதிப்புக்கு சிகிச்சை பெறுகிறேன். சீக்கிரம் திரும்பிவிடுவேன். யாரும் போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றார்.


இந்நிலையில் அவரது உடல்நிலைசீராக இருப்பதாக நேற்று அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை இன்று பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வும் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிப்பதாகவும் தகவல் வெளி யிட்டது.
பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து வரும் தகவல்கள் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக மெசேஜ் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
இயக்குனர் பாரதிராஜா:
என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையா னவன்.. வலிமையானவன்.. அவன் தொழும் தெய்வங்களும் நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும்.. மீண்டு வருவான் காத்திருக்கிறேன்’.

நடிகை ராதிகா சரத்குமார்:
எஸ்.பி.பி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்’

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்:
இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். அற்புதமான குரலால் மற்றவர்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி’.

இசையமைப்பாளர் அனிருத்: விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’.
இவ்வாறும் கூறி உள்ளனர்.
பாலசுப்ரமணியம் குணம் அடைய இன்னும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மெசேஜ் வெளியிட்ட வண்ணமிருக்கின் றனர்.