குமரி

கன மழை கர்ணமாகக் குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. அவ்வகையில் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

எனவே கடந்த 6 ஆம் தேதி முதல் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தற்போது வரை அருவியில் நீர்வரத்து குறையாததால், இன்று 4  ஆவது நாளாக அருவியில் குளிக்கத் தடை விதித்து பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.